அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சித்தேரி கிராமத்தில் காவல் ஆய்வாளர் முனைவர் திரு.T.கண்ணன் அவர்கள் பொதுமக்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை காய்ச்ச கூடாது என்றும் அப்படி மீறி செயல்பட்டால் காவல் துறைக்கு இரகசிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க்கும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.பின் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக அறிவுரை வழங்கினார்.சமூக இடைவெளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திரு.முரளி அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் திரு.குணசேகரன் மற்றும் ஊர் தலைவர்கள் பங்கேற்றனர்.